கோவை: கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் கணேஷ் ஸ்பிண்டெக்ஸ் என்ற தனியார் நூற்பாலை கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என 125க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் மேலாளருக்கு காய்ச்சல் இருந்ததால் கடந்த 28ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார்.
இதையடுத்து, 30ம் தேதி வெளியான பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பெண்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் அனைவரும் க.க.சாவடி பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் கணேஷ் ஸ்பிண்டெக்ஸ் என்ற தனியார் நூற்பாலை கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என 125க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் மேலாளருக்கு காய்ச்சல் இருந்ததால் கடந்த 28ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார்.
இதையடுத்து, 30ம் தேதி வெளியான பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பெண்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் அனைவரும் க.க.சாவடி பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.