பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (27). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆனைமலை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (27). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆனைமலை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த ஆனைமலை போலீசார், ஆனைமலை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சோமந்துரை சித்தூரை சேர்ந்த சுரேஷ் (38) என்பவரை, பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், மூன்று இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் ஆஜர்படுத்தி உடுமலை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...