கோவை: கோவை வெள்ளலூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை வெள்ளலூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளலூர் எல்.ஜி நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார்-சாந்தி தம்பதியினரின் மகன் சரத்குமார் (28). இவர் சென்னையில் உள்ள எச்டிஎப்சி வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில வருடங்களாக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இவருக்கு பொருத்தமான பெண் அமையாததின் காரணமாக சரத்குமார் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் கதவை திறந்து பார்க்கையில் சரத்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இது குறித்து அவரது தாய் சாந்தி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வெள்ளலூர் எல்.ஜி நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார்-சாந்தி தம்பதியினரின் மகன் சரத்குமார் (28). இவர் சென்னையில் உள்ள எச்டிஎப்சி வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில வருடங்களாக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இவருக்கு பொருத்தமான பெண் அமையாததின் காரணமாக சரத்குமார் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் கதவை திறந்து பார்க்கையில் சரத்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இது குறித்து அவரது தாய் சாந்தி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகாத விரக்தியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.