கோவை: கோவை கோட்டத்தில் இருந்து கடந்த 1ம் தேதி 800 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு, இன்று 598 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை கோட்டத்தில் இருந்து கடந்த 1ம் தேதி 800 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு, இன்று 598 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது.
கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மண்டலங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது. அதன் பின், மீண்டும் ஜூலை மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் பொதுபோக்குவரத்து துவங்கியது.
கோவை கோட்டத்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி 800 பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரும்பாலான, பேருந்துகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். இதன் காரணமாக, இன்று 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு 598 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்:
‘கோவை கோட்டத்தில் --கோவையில் 257, திருப்பூரில் 111, நீலகிரியில் 104, ஈரோட்டில் 126 பேருந்துகள் என மொத்தம் 598 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், என்றார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது.
கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மண்டலங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது. அதன் பின், மீண்டும் ஜூலை மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் பொதுபோக்குவரத்து துவங்கியது.
கோவை கோட்டத்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி 800 பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரும்பாலான, பேருந்துகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். இதன் காரணமாக, இன்று 202 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு 598 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்:
‘கோவை கோட்டத்தில் --கோவையில் 257, திருப்பூரில் 111, நீலகிரியில் 104, ஈரோட்டில் 126 பேருந்துகள் என மொத்தம் 598 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், என்றார்.