கோவை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை நகரம் ரொட்டிக் கடை, சோலையார் அணை உட்பட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தன.
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கும் விடுதிகளுக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட புதிய தளர்வுகளின் படி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர இ பாஸ் வாங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கை கழுவும் திரவம் பயன்படுத்துதல், அறைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்திருத்தல், முக கவசம் அணிதல், இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகரம் ரொட்டிக் கடை, சோலையார் அணை உட்பட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தன.
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கும் விடுதிகளுக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட புதிய தளர்வுகளின் படி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர இ பாஸ் வாங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கை கழுவும் திரவம் பயன்படுத்துதல், அறைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்திருத்தல், முக கவசம் அணிதல், இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.