கோவை: தமிழகத்தில் முதன்முதலாக, கோவையில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் இன்று துவக்கப்பட்டது.
கோவை: தமிழகத்தில் முதன்முதலாக, கோவையில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் இன்று துவக்கப்பட்டது.

கோவை வடகோவை சிந்தாமணி பகுதி அருகே திருநங்கைககள் 10 பேர் இணைந்து "கோவை டிரான்ஸ் கிச்சன்" என்ற உணவகத்தை இன்று துவங்கி உள்ளனர். இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்பட கூடிய உணவகம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

தற்போது பத்து திருநங்கைககள் இணைந்து இந்த உணவகத்தை ஆரம்பித்துள்ளதாகவும், வரும் நாட்களில்,வ்மக்களிடையே பெறும் வரவேற்பை பொறுத்து ஆறு மாதம் கழித்து மற்றொரு கிளை ஆரம்பிக்க திட்டமிட்டள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய, கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் சங்கீதா:
தமிழகத்தில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம், கோவையில் இன்று ஆரம்பித்து உள்ளோம். இந்த முயற்சி, திருநங்ககளின் வாழ்வாதாரம் மேம்பட பெரிதும் உதவியாக இருக்கும். வழக்கமான ஹோட்டல்களை போன்றே இதுவும் இயங்கும்.
இந்த உணவகம் திறப்பதற்கு யுனைடட் வே சென்னை, ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ மற்றும் அப்பாசாமி கல்லூரியினர் உதவியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அப்பாசாமி கல்லூரியில் ஆறு மாதம் சமையல் மற்றும் உணவக மேலாண்மை குறித்து பயிற்சி எடுத்து கொண்டதாகவும், தெரிவித்தனர்.
கோவை வடகோவை சிந்தாமணி பகுதி அருகே திருநங்கைககள் 10 பேர் இணைந்து "கோவை டிரான்ஸ் கிச்சன்" என்ற உணவகத்தை இன்று துவங்கி உள்ளனர். இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்பட கூடிய உணவகம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
தற்போது பத்து திருநங்கைககள் இணைந்து இந்த உணவகத்தை ஆரம்பித்துள்ளதாகவும், வரும் நாட்களில்,வ்மக்களிடையே பெறும் வரவேற்பை பொறுத்து ஆறு மாதம் கழித்து மற்றொரு கிளை ஆரம்பிக்க திட்டமிட்டள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய, கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் சங்கீதா:
தமிழகத்தில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம், கோவையில் இன்று ஆரம்பித்து உள்ளோம். இந்த முயற்சி, திருநங்ககளின் வாழ்வாதாரம் மேம்பட பெரிதும் உதவியாக இருக்கும். வழக்கமான ஹோட்டல்களை போன்றே இதுவும் இயங்கும்.
இந்த உணவகம் திறப்பதற்கு யுனைடட் வே சென்னை, ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ மற்றும் அப்பாசாமி கல்லூரியினர் உதவியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அப்பாசாமி கல்லூரியில் ஆறு மாதம் சமையல் மற்றும் உணவக மேலாண்மை குறித்து பயிற்சி எடுத்து கொண்டதாகவும், தெரிவித்தனர்.