நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை தொடரும் எனவும் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை தொடரும் எனவும் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு பணி நிமித்தமாக வரலாம் ஆனால், சுற்றுலாவிற்காக யாரும் வரக்கூடாது எனவும் காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள் திறக்கப்படும் என்றார்.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை தொடரும் எனவும் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பேருந்துகள் இன்று முதல் மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்டு வருவதாகவும் கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்கள் பேருந்துகளில் ஏற அனுமதி இல்லை என்று கூறிய அவர், இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் தாங்களாகவே முன் வந்து பரிசோதனை செய்தால் மட்டுமே அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் தாமதமாக வந்ததால் அவர்களின் உயிரை காப்பற்ற முடியவில்லை என்றார்.
எனவே, அறிகுறியுள்ளவர்கள் உடனே வந்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நேற்று முதுமலை அருகேயுள்ள சிங்கரா வனப்பகுதியில் புலி தாக்கி ஆதிவாசி பெண் பலியானது குறித்து பேசிய அவர், இது ஆட்கொல்லி புலியாக தெரியவில்லை எனவும், அதனை கண்காணிக்க கேமிராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.