கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மனு அளித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்!

கோவை: கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மனு அளித்து மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: நீட் தேர்வு நடத்துவதை கண்டித்து கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மனு அளித்து மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் நுழைவுத் தேர்வை கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் கோரியும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மனு அளித்தனர்.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா பேசுகையில், 'மறைந்த அதிமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்தார். மேலும், இந்த அரசு அம்மாவின் அரசு என திரும்ப திரும்ப தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல, நீட்தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசு திணிக்க முயல்கிற போது அதனை நெஞ்சுரத்தோடு எதிர்க்க துணிவில்லாமல் உள்ளது. எனவே, முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மனு அளித்துள்ளோம், என்றார்.

மேலும், நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், நீட் தேர்வு நடத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய மன் கி பாத் உரையில், நீட் தேர்வு குறித்து பிரதமரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் அதிகமாக எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...