கோவை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று 406 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது, என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 130 அரசு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், தமிழக அரசு இன்று முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து அமல்படுத்தி உள்ளது.
அதன்படி, மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்க மீண்டும் அனுமதி அளித்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், மடத்துக்குளம் உடுமலைபேட்டை, அவிநாசி , தாராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் எல்லை வரை இன்று 130 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் வருகையை பொருத்து பேருந்துகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும், எனவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், தமிழக அரசு இன்று முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து அமல்படுத்தி உள்ளது.
அதன்படி, மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்க மீண்டும் அனுமதி அளித்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், மடத்துக்குளம் உடுமலைபேட்டை, அவிநாசி , தாராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் எல்லை வரை இன்று 130 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் வருகையை பொருத்து பேருந்துகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும், எனவும் தெரிவித்துள்ளனர்.