கோவை மாவட்டத்தில் இன்று 406 பஸ்கள் இயக்கம்

கோவை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று 406 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது, என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று 406 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது, என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழக அரசு இன்று, செப்டம்பர் 1 முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படாது, என்றும் அரசு அறிவித்துள்ளது.



இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 406 அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல் கட்டமாக கோவையில் 50 சதவீத அரசு பஸ்கள் முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. அதாவது, 406 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோவை காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையம் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...