நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மசினகுடியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மசினகுடியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை காப்புக்காப்புக் காடுகளில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். இதில் குறும்பர் பாடியை சேர்ந்த குறும்பர் இன பெண்ணான கௌரி(50) என்பவர் தன் கணவருடன் முதுமலை காப்புக்காட்டில் கால்நடைகளை மேய்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆடுகளை விரட்ட காட்டிற்குள் சென்ற போது, புலி தாக்கியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்த வன பாதுகாவலர்கள், காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாதுகாப்பு நிபுணர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், குறும்பர்கள் பொதுவாக குகையில் வசிப்பவர்கள். இது போன்ற சம்பவம் மசினகுடியில் முதன் முதலாக நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
முதுமலை காப்புக்காப்புக் காடுகளில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். இதில் குறும்பர் பாடியை சேர்ந்த குறும்பர் இன பெண்ணான கௌரி(50) என்பவர் தன் கணவருடன் முதுமலை காப்புக்காட்டில் கால்நடைகளை மேய்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆடுகளை விரட்ட காட்டிற்குள் சென்ற போது, புலி தாக்கியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்த வன பாதுகாவலர்கள், காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாதுகாப்பு நிபுணர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், குறும்பர்கள் பொதுவாக குகையில் வசிப்பவர்கள். இது போன்ற சம்பவம் மசினகுடியில் முதன் முதலாக நடந்துள்ளது என்று தெரிவித்தார்.