வால்பாறையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரை அடங்கிய அம்மா கோவிட் 19 கிட் விநியோகம்!

கோவை: வால்பாறையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரை அடங்கிய அம்மா கோவிட் 19 கிட் வழங்கப்பட்டது.

கோவை: வால்பாறையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரை அடங்கிய அம்மா கோவிட் 19 கிட் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின்படி தமிழகம் முழுவதிலுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அம்மா கோவிட் 19 நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மாத்திரைகள் அடங்கிய கிட் வழங்கப்பட்டு வருகிறது.



இதில், வால்பாறையில் சுமார் 15,000 பேருக்கு இந்த கிட் வழங்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அம்மா கோவிட் 19 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாத்திரை, கையுறை, முகக்கவசம் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவை அடங்கிய கிட் வழங்கப்பட்டது.



வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், கூட்டுறவு நகரவங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, சுகாதாரநிலைய மருத்துவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...