இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கோவை: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மலையாள மொழி பேசும் மக்களால் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில் நிறைவு பெறுகிறது. மக்களை தேடி வரும் மகாபலி மன்னனை, வரவேற்கும் விதமாக மலையாளிகள் தங்களது வீட்டு வாசல்களில், அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்தும், பலவகை ருசியான உணவுப் பதார்த்தங்களை சமைத்து உண்டும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி தழைத்தோங்கும் என்பது கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளிகள் வசித்து வருகின்றனர்.இதனால், கோவை மாவட்டத்தில்ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து வருகிறது.அதன்படி இந்த ஆண்டும் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டு இருந்தார்.

அரசு வழிகாட்டுதல்களின் படி தனிநபர் இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, ஓணம் பண்டிகையை, பாதுகாப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தபட்டு இருந்தது.இந்த நிலையில், கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் அத்தப்பூகோலங்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் குறைந்த அளவிலான நபர்கள் தனிநபர் இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதேபோல, கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மலையாளிகள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மலையாள மொழி பேசும் மக்களால் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில் நிறைவு பெறுகிறது. மக்களை தேடி வரும் மகாபலி மன்னனை, வரவேற்கும் விதமாக மலையாளிகள் தங்களது வீட்டு வாசல்களில், அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்தும், பலவகை ருசியான உணவுப் பதார்த்தங்களை சமைத்து உண்டும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி தழைத்தோங்கும் என்பது கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளிகள் வசித்து வருகின்றனர்.இதனால், கோவை மாவட்டத்தில்ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து வருகிறது.அதன்படி இந்த ஆண்டும் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டு இருந்தார்.
அரசு வழிகாட்டுதல்களின் படி தனிநபர் இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, ஓணம் பண்டிகையை, பாதுகாப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தபட்டு இருந்தது.இந்த நிலையில், கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் அத்தப்பூகோலங்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் குறைந்த அளவிலான நபர்கள் தனிநபர் இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல, கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மலையாளிகள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.