ஊரடங்கின் போது வெளியே வர கூடாது என்று மக்களுக்கு அரசு சொல்லும் அறிவுரை, மது பிரியர்களுக்கு பொருந்தாதா? கோவை மக்கள் கேள்வி

ஊரடங்கின் போது வெளியே வர கூடாது என்று மக்களுக்கு அரசு சொல்லும் அறிவுரை, மது பிரியர்களுக்கு பொருந்தாதா? கோவை மக்கள் கேள்வி



கோவை: கோவையில் ஞாயிறு ஊரடங்கில் சட்ட விரோதமாக, மது விற்பனை நடைபெற்று வருகிறது, எனதொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இன்று கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. 



சட்ட விரோதமாக, அக்கடையின் பின்புறமும் வெளியிலும், மது பிரியர்கள், மது பாட்டில்களை, சர்வ சாதாரணமாக வாங்கி செல்கின்ற காட்சிகள், அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது. 



அரசின் தளர்வில்லா ஊரடங்கை மதித்து, இன்று ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கல், சிறு வியாபாரிகள், பெட்டி கடைகள், தள்ளு வண்டி கடைகள் என அனைவரும் அவர்களது பணிகளையும், வருமானத்தையும் விடுத்து, வீடுகளில் இருக்க, டாஸ்மாக் கடைகளில், இப்படி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது இவ்விதத்தில் நியாயம்? என்று கோவை மக்கள், வணிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 



மது வாங்க இப்படி வெளியே வரும் மக்களால் கொரோனா பரவாதா? 

ஊரடங்கிலும் டாஸ்மாக், செயல்பட எதேனும் சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டுள்ளதா? யாரும் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என்று மக்களுக்கு அரசு சொல்லும் அறிவுரை, மது பிரியர்களுக்கு பொருந்தாதா? என்று தொடர்ந்து குரல் எழுப்பியும், இதற்காக தீர்வு இன்னும் கிடைத்தபாடில்லை, என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...