கோவையில் இருந்து டெல்லிக்கு 16 பெட்டிகளுடன் சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது

கோவையில் இருந்து டெல்லிக்கு 16 பெட்டிகளுடன் சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது

கோவை: கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 16 பெட்டிகளுடன் சரக்கு ரயில்இன்று புறப்பட்டு சென்றது.

வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி பட்டேல் நகருக்கு இன்று முதல் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டது. காலை 10 மணிக்கு இந்த ரயில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழியாக திங்கட்கிழமை இரவு டெல்லி பட்டேல் நகரை சென்றடையும். அங்கு இருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு வடகோவை ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்து சேரும்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறிகையில், ‘‘இந்த சிறப்பு சரக்கு ரயிலில் 16 பெட்டிகளில் 350 டன் பொருட்கள் கொண்டு செல்ல முடியும். காய்கறிகள், உணவு பொருட்கள், மருந்துகள், முகக்கவசங்கள், துணிகள் போன்ற பொருட்களை இந்த ரயில் ஏற்றி செல்லும்,’’ என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...