பொள்ளாச்சியில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள, தொலைபேசி எண் அறிவிப்பு
கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், வருவாய்த் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் மூலம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில், பொள்ளாச்சியில் மூன்று குழந்தைகள் உட்பட 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாச்சிமுத்து பிரசவ விடுதி, தனியார் திருமண மண்டபம் என,கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 600 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால், மருத்துவமனைகளுக்கு செல்ல பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
எனவே, இப்பிரச்சனைக்கு தீர்வு காண, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவின்பேரில், சார் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வைரஸ் தடுப்பு மையத்திற்கு 04259 224855 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும். பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்ற விவரங்களை அளித்தால், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நேரடியாக இருப்பிடத்திற்ககே வந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள், என்று சார் ஆட்சியர், வைத்தியநாதன், அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாச்சிமுத்து பிரசவ விடுதி, தனியார் திருமண மண்டபம் என,கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 600 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால், மருத்துவமனைகளுக்கு செல்ல பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
எனவே, இப்பிரச்சனைக்கு தீர்வு காண, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவின்பேரில், சார் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வைரஸ் தடுப்பு மையத்திற்கு 04259 224855 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும். பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்ற விவரங்களை அளித்தால், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நேரடியாக இருப்பிடத்திற்ககே வந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள், என்று சார் ஆட்சியர், வைத்தியநாதன், அறிவிப்பு விடுத்துள்ளார்.