பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று.

பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கோவை: பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி 43 வயது ஆண், ஆனைமலை அண்ணா நகர் 58 வயது ஆண், கூட்ஷெட் ரோடு 60 வயது மூதாட்டி, யூ.கே.எல் நகர் 73 வயது முதியவர், 47 வயதான அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர், நல்லி கவுண்டர் வீதி 31 வயது ஆண், வடுகபாளையம் கலைஞர் நகர், 57 வயது ஆண், சுப்பையா நகர் 56 வயது ஆண்,தேவநல்லூர் லட்சுமனபுரம், 47 வயது பெண், தென்குமாரபாளையம் 64 வயது முதியவர், ரங்கசமுத்திரம் 26 வயது பெண், மோதிராபுரம் 72 வயது ஆண்,ஜமீன் ஊத்துக்குளி ராமர் கோவில் வீதியை சேர்ந்த 24 மற்றும், 26 வயது ஆண், 54 வயது பெண், ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்து நகரை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, சின்னாம்பாளையம் ராஜ் நகர் 8 மாத ஆண் குழந்தை, 29 வயது பெண், 56 வயது பெண், 5 வயது ஆண், உள்ளிட்ட 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நோய் தொற்று அதிகரித்து வருவதால் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க பொள்ளாச்சி தீயணைப்பு துறை வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நகர் மற்றும் கிராம பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் சுகாதார துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...