கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (81), கூலி தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள்(55). இருவருக்கும் திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (81), கூலி தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள்(55). இருவருக்கும் திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில், வேலுச்சாமிக்கு சொந்தமான நிலத்தை விற்ற பணம் அவரது மனைவியிடம் இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை கொடுக்க மறுத்ததால், வேலுச்சாமிக்கும், அவரது மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு காளியம்மாள் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி, வேலுச்சாமி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற கோட்டூர் போலீசார் தீ காயங்களுடன் இருந்த காளியம்மாளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வேலுச்சாமிக்கு சொந்தமான நிலத்தை விற்ற பணம் அவரது மனைவியிடம் இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை கொடுக்க மறுத்ததால், வேலுச்சாமிக்கும், அவரது மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு காளியம்மாள் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி, வேலுச்சாமி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற கோட்டூர் போலீசார் தீ காயங்களுடன் இருந்த காளியம்மாளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.