ஊரடங்கு விதியை மீறியதால் கோவையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு..!

கோவை: ஊரடங்கு விதியை மீறி சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு, நேற்று அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதால் 4 பிரிவுகளில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு.








கோவை: ஊரடங்கு விதியை மீறி சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு, நேற்று அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதால் 4 பிரிவுகளில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு.

கோவை காந்திபுரம் பகுதி வி.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு, நேற்று புதிதாக பாஜக உறுப்பினராக சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை வந்ததை தொடர்ந்து, அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை, மணிமடுடத்துடன் பாஜக சார்பில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சி, மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில பொதுசெயலாளர் ஜி.கே.செல்வகுமார், பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டது.

எனவே, ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் சேர்த்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்காக, அண்ணாமலை உட்பட நந்தகுமார், ஜி கே செல்வகுமார், எஸ் ஆர் சேகர், கனகசபாபதி ஆகியோர் மீது காட்டூர் காவல்துறையினர் 5 பிரிவின் (ஊரடங்கு விதி மீறல், ஐபிசி செக்சன் 143, 341, 269, 285) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...