கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்; தேதிகளை மாற்றி கொள்ளலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்; தேதிகளை மாற்றி கொள்ளலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புது டெல்லி: கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் தேர்வுகளை தள்ளி வைக்கலாம், ஆனால், கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது 

எந்த சூழ்நிலையிலும், தேர்வு நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்கக் கூடாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா பரவலால், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இறுதி பருவத் தேர்வை தவிர மற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விட்டன. ஆனால், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யுஜிசி அறிவித்தது.

இந்த சூழலில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளித்தனர். அதில், கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை மாநில அரசுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...