நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரில் நான்கு பேர் மட்டும் இன்று ஆஜரான நிலையில் 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, அனைவரையும் வரும் செப்., 3ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.
நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட10 பேரில் நான்கு பேர் மட்டும் இன்று ஆஜரான நிலையில் 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, அனைவரையும் வரும் செப்., 3ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று(27ம் தேதி) ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி மற்றும் மனோஜ் சாமி ஆகிய நான்கு பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து. ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று(27ம் தேதி) ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி மற்றும் மனோஜ் சாமி ஆகிய நான்கு பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து. ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.