பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன்,  மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், என மூன்று திமுக பிரமுகர் உட்பட 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி

கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள்  கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன்,  மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், என மூன்று திமுக பிரமுகர் உட்பட 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள்கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன்,மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், என மூன்று திமுக பிரமுகர் உட்பட 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இருவர் 

உயிரிழப்பு.

பொள்ளாச்சி செங்குட்டுவன் வீதி 35 வயது ஆண், கிணத்துக்கடவு சொக்கனூரில் 42 வயது பெண், கிணத்துக்கடவு மன்றாம்பாளையம் 38 வயது ஆண், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி 69 வயது ஆண், பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதி 52 வயது பெண், கொள்ளுபாளையம் அன்பு நகர் பகுதியில் 40 வயது பெண், வால்பாறையில் 57 வயது ஆண், ஆனைமலை ஸ்ரீ ராம் நகர் 46 வயது ஆண், பொள்ளாச்சி ஜோதி நகர்காலனி 91 வயது ஆண், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வீதி 55 வயது ஆண், கிணத்துக்கடவு பத்தாம் நம்பர் 8த்தூரில் 45 வயது பெண், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி 55 வயது பெண், நடராஜா லே அவுட்டில் 50 வயது ஆண் மற்றும் 40 வயது பெண், வள்ளலார் வீதியில் 40 வயது ஆண், கிணத்துக்கடவு குமாரபாளையத்தில் 50 வயது பெண், அகிலாண்டபுரம் பகுதியில் 51 வயது பெண். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் வசித்துவரும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் மற்றும் அவரது மகன் மு.க.முத்து திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், என பொள்ளாச்சியில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

நோய் பாதிக்கப்பட்ட அனைவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் நண்பர்கள், என அனைவருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், பொள்ளாச்சி எல்.ஐ.ஜி காலனியை சேர்ந்த 56 வயது ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் ஆனைமலை சேர்ந்த 60 வயது ரோடு காண்ட்ராக்டர் ஆகிய இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சுகாதார அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...