புதிய கல்வி கொள்கை குறித்து திருபெருந்திரு பேரூர்‌ ஆதினம்‌ அவர்களுடன்‌ பேராசிரியர்‌ கனகசபாபதி கலந்துரையாடல்!

கோவை: பேராசிரியர்‌ கனகசபாபதி அவர்கள்‌, பேரூர்‌ ஆதினம்‌ திருபெருந்திரு மருதாசல அடிகளார்‌ அவர்களை சந்தித்து புதிய கல்வி கொள்கை குறித்து கலந்துரையாடினார்.

கோவை: பேராசிரியர்‌ கனகசபாபதி அவர்கள்‌, பேரூர்‌ ஆதினம்‌ திருபெருந்திரு மருதாசல அடிகளார்‌ அவர்களை சந்தித்து புதிய கல்வி கொள்கை குறித்து கலந்துரையாடினார்.



இந்த சந்திப்பின் போது, ஏராளமான கல்வி நிறுவனங்களையும்‌ தலைமையேற்று நடத்தி வருபவர்‌ என்ற வகையில்‌ அடிகளார்‌ அவர்கள்‌ புதிய கல்வி கொள்கை சிறப்பானதாக அமைந்திருப்பதாக அதனை வரவேற்றார்‌.

அதேபோல, புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான அடிப்படையாகவும்‌, பிரதமர்‌ மோடி அவர்களின்‌ தொலை நோக்கு திட்டங்களின்‌ வெளிப்பாடாகவும்‌ இந்த கல்விக்‌ கொள்கை அமைந்திருப்பதாக அடிகளார் அவர்கள்‌ பாராட்டினார்‌.

மொழிக்கொள்கை, மொழிக்கல்வி மற்றும்‌ தமிழ்‌ போன்ற பிராந்திய செம்மொழிகளுக்கு முன்னெப்போதும்‌ இல்லாத அளவுக்கு வழங்கப்பட்டிருக்கும்‌ முக்கியத்துவம் ஆகியவை குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்த அடிகளார்‌ அவர்கள்‌, புதிய கல்விக்கொள்கை வரைவு திட்டத்தில்‌ கல்வி முறையை சீரமைப்பதற்கான முழுமையான அணுகுமுறை காணப்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கையில்‌ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்‌ அம்சங்களான புத்தக பை இல்லாத தினங்கள் மூலம்‌ கற்றல்‌ மற்றும்‌ கல்வி சூழல்‌ மகிழ்ச்சியானதாக மாற்றப்படும்‌ எனவும்‌, தொழில்‌ பயிற்சி போன்ற அம்சங்கள்‌ குழந்தைகளை இளம்‌ வயதிலிருந்தே சிறப்பாக உருவாக்குவதில்‌ பெரும்பங்கு வகிக்கும்‌ என்று பாராட்டினார்.

மேலும், திருபெருந்திரு அடிகளார்‌ அவர்கள்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்கள்‌ மூலம்‌ நாட்டிற்கு கிடைத்துள்ள வலிமையான தலைமை மீதும்‌, பிரதமரின்‌ சீரிய தலைமையினால்‌ புத்தெழுச்சி பெரும்‌ பாரதத்தின்‌ மீதும்‌ கொண்டுள்ள நம்பிக்கைக்காகவும்‌, அவரது மேலான ஆசிகளுக்காகவும்‌ பேராசிரியர்‌ கனகசபாபதி அவர்கள்‌ மகிழ்ச்சி தெரிவித்தார்‌.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...