நெல் சாகுபடியை பாதிக்கும்,புகையான் பூச்சிகளை எப்படி கட்டுபடுத்துவது என பொள்ளாச்சி விவசாயிகளுக்கு, வேளாண்துறையினர் அறிவுரை.
கோவை: நெல் சாகுபடியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த,
புகையான் பூச்சிகளை அழிக்க இரவு நேரங்களில் விளக்கு பொறிகள் பயன்படுத்தலாம், என
வேளாண்துறையினர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை ஒன்றிய பகுதியில் நடப்பாண்டு, முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 7-ஆம் தேதி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 720 ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வப்போது கனமழை மற்றும் கடும் வெயிலும் நிலவி வருவதால், பயிர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, வேளாண் துறையினர் கூறியதாவது:
மழை பெய்து வருவதால், நெல்லுக்கு தேவையான அளவு நீரை மட்டுமே பாய்ச்சவேண்டும். வயலில் வடிகால் வசதி செய்து நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்பது மற்றும் அதிகப்படியான தழைச்சத்து உரத்தால், புகையான் இலை சுருட்டு நோய்கள் தாக்குதல் ஏற்படும்.

நோய்கள் தாக்குதல் ஏற்பட்டால் 30 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும். உரத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தினால், இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் குறையும். புகையான் பூச்சிகளை அழிக்க இரவு நேரங்களில் விளக்குபொறிகள் பயன்படுத்தலாம்.

நோய் தாக்குதல்கள் காணப்பட்டால் விவசாயிகள் உடனடியாக, வேளாண் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்று அறிவுறுத்தியுள்ளனர்.
புகையான் பூச்சிகளை அழிக்க இரவு நேரங்களில் விளக்கு பொறிகள் பயன்படுத்தலாம், என
வேளாண்துறையினர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை ஒன்றிய பகுதியில் நடப்பாண்டு, முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 7-ஆம் தேதி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 720 ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வப்போது கனமழை மற்றும் கடும் வெயிலும் நிலவி வருவதால், பயிர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வேளாண் துறையினர் கூறியதாவது:
மழை பெய்து வருவதால், நெல்லுக்கு தேவையான அளவு நீரை மட்டுமே பாய்ச்சவேண்டும். வயலில் வடிகால் வசதி செய்து நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்பது மற்றும் அதிகப்படியான தழைச்சத்து உரத்தால், புகையான் இலை சுருட்டு நோய்கள் தாக்குதல் ஏற்படும்.
நோய்கள் தாக்குதல் ஏற்பட்டால் 30 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும். உரத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தினால், இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் குறையும். புகையான் பூச்சிகளை அழிக்க இரவு நேரங்களில் விளக்குபொறிகள் பயன்படுத்தலாம்.
நோய் தாக்குதல்கள் காணப்பட்டால் விவசாயிகள் உடனடியாக, வேளாண் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்று அறிவுறுத்தியுள்ளனர்.