கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து குறைந்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 469 ரூபாய் அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து குறைந்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 469 ரூபாய் அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது:
ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 506 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து, அதிகாரிகள் ஏலமிட்டனர். முதல் தர கொப்பரை 285 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.9700 -க்கும், அதிகபட்சம் ரூ. 10,808 -க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 2-ம் தர கொப்பரை 221 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 8400 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 6000 -க்கும் விற்பனையானது.
இன்று நடந்த ஏலத்தில், 11 வியாபாரிகள், 114 விவசாயிகள் பங்கேற்றனர். ஆனைமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கொப்பரையின் ஈரப்பதம் குறைந்துள்ளது.
இதனால், கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.469 கூடுதல் விலை கிடைத்துள்ளது. மொத்தம், 253 குவிண்டால் ரூ. 22 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது, என்றார்.
இது குறித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது:
ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 506 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து, அதிகாரிகள் ஏலமிட்டனர். முதல் தர கொப்பரை 285 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.9700 -க்கும், அதிகபட்சம் ரூ. 10,808 -க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 2-ம் தர கொப்பரை 221 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 8400 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 6000 -க்கும் விற்பனையானது.
இன்று நடந்த ஏலத்தில், 11 வியாபாரிகள், 114 விவசாயிகள் பங்கேற்றனர். ஆனைமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கொப்பரையின் ஈரப்பதம் குறைந்துள்ளது.
இதனால், கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.469 கூடுதல் விலை கிடைத்துள்ளது. மொத்தம், 253 குவிண்டால் ரூ. 22 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது, என்றார்.