கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு சேகரமாகும் சுமார் 1,200 டன் அளவிலான குப்பைகள் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இப்படி இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 20 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கி உள்ளது.
இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்து கழிவு மக்க செய்ய, கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 60.11 கோடியில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
ஆனால், ரூ.60.11 கோடியில் நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது வரையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் மறு சுழற்சி செய்யும் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.
மேலும், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்க, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 69 இடங்களில் சிறு மறுசுழற்சி மையங்கள் (மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்) தற்போது கட்டப்பட்டு வருவதாகவும், அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது பெரும் அளவில் குறைக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி சார்பில் கடந்த ஜூலை 8ம் தேதி கூறப்பட்டது.
ஆனால், மாநகராட்சி அறிவித்தபடி இன்று வரையிலும், இன்னும் ஒரு மையத்தில் கூட, இந்த மறு சுழற்சி பணிகள் தொடங்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த மறு சுழற்சி மையங்கள் எந்த ஒரு பயனுமின்றி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் வெள்ளலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு சேகரமாகும் சுமார் 1,200 டன் அளவிலான குப்பைகள் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இப்படி இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 20 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கி உள்ளது.
இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்து கழிவு மக்க செய்ய, கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 60.11 கோடியில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
ஆனால், ரூ.60.11 கோடியில் நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது வரையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் மறு சுழற்சி செய்யும் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.
மேலும், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்க, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 69 இடங்களில் சிறு மறுசுழற்சி மையங்கள் (மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்) தற்போது கட்டப்பட்டு வருவதாகவும், அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது பெரும் அளவில் குறைக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி சார்பில் கடந்த ஜூலை 8ம் தேதி கூறப்பட்டது.
ஆனால், மாநகராட்சி அறிவித்தபடி இன்று வரையிலும், இன்னும் ஒரு மையத்தில் கூட, இந்த மறு சுழற்சி பணிகள் தொடங்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த மறு சுழற்சி மையங்கள் எந்த ஒரு பயனுமின்றி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் வெள்ளலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.