திருப்பூரில் ஊராட்சி தலைவரை சாதி பெயரைச் சொல்லி திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய சமூக நீதிப் பேரவை சார்பில் ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவரை ஒருமையில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேசிய சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவரை ஒருமையில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேசிய சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் செல்வி. இவருடைய கணவர் ரமேஷ் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அதே பகுதியில் ஆறாவது வார்டு ஊராட்சி உறுப்பினராக இருப்பவர் குப்புசாமி. இவர் பஞ்சாயத்து அலுவலக பணியில் இருந்தபோது செல்வியை தகாத முறையில் ஜாதியை சொல்லி திட்டியதாக தாராபுரம் காவல் நிலையத்தில் குப்புசாமி என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார்.

ஆனால், அந்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ததை அடுத்து குப்புசாமி என்பவர் மீது தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.



இந்த நிலையில், குப்புசாமி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, வேறு எந்த விசாரணையையும் காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மேற்கொண்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் இன்று தேசிய சமூக நீதிப் பேரவை சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், மேற்கண்ட புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், குப்புசாமி, தேவா ஆகிய 3 பேரும் தங்களை தனியார் மண்டபத்தில் வைத்து மிரட்டியதாகவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...