கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!

கோவை: கோவை மாவட்டம், சுல்தான்பபேட்டையில், ஜே கிருஷ்ணாபுரம் என்ற ஒன்றியம் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியம் பொது தொகுதியாக இருந்த நிலையில், இதனை எஸ்சி தொகுதியாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கோவை: கோவை மாவட்டம், சுல்தான்பபேட்டையில், ஜே கிருஷ்ணாபுரம் என்ற ஒன்றியம் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியம் பொது தொகுதியாக இருந்த நிலையில், இதனை எஸ்சி தொகுதியாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து, நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சியில்அருந்ததியர் வகுப்பை சார்ந்த தலித் பெண் சரிதா, திமுக சார்பில் போட்டியிட்டுஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தலித் ஊராட்சி மன்ற தலைவரை நாற்காலியில் அமரவிடாமல் தடுப்பதாக எழுந்த புகாரை, தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிமுக பிரமுகர் மீது நெகமம் காவல் நிலை உசிலமணி (எ) பாலசுப்பிரமணியம் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது.

இது குறித்த செய்தி ஊடங்களில் வெளிவந்த நிலையில், இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம், தானாக முன் வந்து கையில் எடுத்துள்ளது.

இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊராட்சி பெண் தலைவர் நாற்காலியில் அமரவிடாமல்மிரட்டியது, பெயர் பலகையில் ஊராட்சி தலைவர் பெயரை எழுத விடாமல் தடுத்தது தொடர்பான விவகாரம், தொடர்பாக 3 வார காலத்திற்குள்உரிய விளக்கத்தை மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், எனவும் மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...