கோவை சாய்பாபா காலனியில் அட்டகாசம் செய்யும் குரங்கு கூட்டத்தை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது

கோவை: கோவை சாய்பாகாலணி, ரகுபதி லே அவுட் பகுதியில் ஓரிரு குரங்குகள் ஆங்காங்கே இருந்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், அதன் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அதனை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.








கோவை: கோவை சாய்பாகாலணி, ரகுபதி லே அவுட் பகுதியில் ஓரிரு குரங்குகள் ஆங்காங்கே இருந்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், அதன் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அதனை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 



இதனை தொடர்ந்து, குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் ஒரு வீட்டில் கூண்டு வைக்கபட்டது. கூண்டின் உள்ளே பழங்களை வைத்து உள்ள வனத்துறையினர், குரங்குகள் அதை தின்ன வரும்போது கதவு தானாக மூடும் வகையில் வைத்து உள்ளனர்.



கடந்த ஓரிரு தினங்களுக்கு முன், இந்த குரங்குகள் கூட்டமாக, அந்த பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்ததை கண்ட நாய் குரைத்து உள்ளது. நாயை குரங்குகள் ஒன்றாக பயமுறுத்தி உள்ளது. இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் நாயை வீட்டின் உள்ளேயே அடைத்து வைத்துள்ளார். 

மேலும், அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வனத்துறையின் அதிவிரைவு குழுவினர், அந்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர். 



இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்:

ஓரிரு குரங்குகள் மட்டுமே, இந்த பகுதியில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக 15ற்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. 

துணிமணிகளை எடுத்து செல்வது, கதவை தட்டுவது, மரங்களில் உள்ள பழங்களை பறித்து செல்வது என தொடர் அட்டகாசம் செய்து வருவதாக தெரிவித்தனர்.

இங்கு ஏராளமான குடியிருப்பு பகுதிகளும், அதிக அளவில் மாம்பழ மற்றும் பலா மரங்கள் உள்ள காரணமாகவே, இதனை தேடி, குரங்குகள் இங்கு வருவதாகவும், ஒரு சிலர் தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...