கோவை: கோவையில் ஆங்கில வழி கல்வி பயின்ற தனது மகனை, அரசு பள்ளியில் சேர்த்த தமிழ் ஆசிரியை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து உள்ளது, என தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் ஆங்கில வழி கல்வி பயின்ற தனது மகனை, அரசு பள்ளியில் சேர்த்த தமிழ் ஆசிரியை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து உள்ளது, என தெரிவித்துள்ளார்.
கோவை செம்மாண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜாஸ்மின் விக்டோரியா. இவரது கணவர் பாலமுருகன் தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இத்தம்பதியினருக்கு, ஜெரிக் சாமுவேல் (11) ஏஞ்சிலினா (1 1/2) வயது என இரு குழந்தைகள் உள்ளனர். ஜெரிக் சாமுவேல் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த நிலையில், இந்த வருடம் தனது மகனை ஆத்துபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்து உள்ளனர், அவர்களது
பெற்றோர்.
தனியார் பள்ளியில், தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் மோகம் பெற்றோர்களிடம் இருக்கும் அதிர்காரித்து வரும் நிலையில், ஆங்கில வழி கல்வி பயின்று வந்த மாணவனை அரசு பள்ளியில், இந்த ஆசிரியை சேர்த்து உள்ளார் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து, அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆரம்பம் முதலே குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம், தனக்கு இருந்ததாகவும் தனது எண்ணதிற்கு குடும்ப நபர்களுக்கு விருப்பம் தெரிவிக்காததால், மகனை தனியார் பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தார்.
5 ஆம் வகுப்பு வரை தங்களது மகன் ஆங்கில வழி கல்வி முறையில் பயின்று வந்த நிலையில், இந்த வருடம் 6 வகுப்பு செல்ல இருந்த நிலையில் தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தபோது, அவர் சம்மதம் அளித்ததை தொடர்ந்து அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தனது மகனுக்கும் இந்த சூழல் வெகுவாக பிடித்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது ஆங்கில வழி கல்வி நிலையங்களுக்கு இணையான தரத்தில் அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார்.
கொரோனா கால கட்டத்தில் பணம் கட்ட முடியாமல் பலர் அவதிபட்டு வருவது, வேதனை அளிப்பதாகவும், பெற்றோர்கள் தங்கள் சூழ்நிலைகளை அறிந்து அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முன்வர வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.
கோவை செம்மாண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜாஸ்மின் விக்டோரியா. இவரது கணவர் பாலமுருகன் தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இத்தம்பதியினருக்கு, ஜெரிக் சாமுவேல் (11) ஏஞ்சிலினா (1 1/2) வயது என இரு குழந்தைகள் உள்ளனர். ஜெரிக் சாமுவேல் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த நிலையில், இந்த வருடம் தனது மகனை ஆத்துபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்து உள்ளனர், அவர்களது
பெற்றோர்.
தனியார் பள்ளியில், தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் மோகம் பெற்றோர்களிடம் இருக்கும் அதிர்காரித்து வரும் நிலையில், ஆங்கில வழி கல்வி பயின்று வந்த மாணவனை அரசு பள்ளியில், இந்த ஆசிரியை சேர்த்து உள்ளார் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து, அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆரம்பம் முதலே குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம், தனக்கு இருந்ததாகவும் தனது எண்ணதிற்கு குடும்ப நபர்களுக்கு விருப்பம் தெரிவிக்காததால், மகனை தனியார் பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தார்.
5 ஆம் வகுப்பு வரை தங்களது மகன் ஆங்கில வழி கல்வி முறையில் பயின்று வந்த நிலையில், இந்த வருடம் 6 வகுப்பு செல்ல இருந்த நிலையில் தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தபோது, அவர் சம்மதம் அளித்ததை தொடர்ந்து அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தனது மகனுக்கும் இந்த சூழல் வெகுவாக பிடித்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது ஆங்கில வழி கல்வி நிலையங்களுக்கு இணையான தரத்தில் அரசு பள்ளிகளில் தரம் உயர்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார்.
கொரோனா கால கட்டத்தில் பணம் கட்ட முடியாமல் பலர் அவதிபட்டு வருவது, வேதனை அளிப்பதாகவும், பெற்றோர்கள் தங்கள் சூழ்நிலைகளை அறிந்து அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முன்வர வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.