நீலகிரி: உதகையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காணொலிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நீலகிரி: உதகையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காணொலிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இன்று நடந்தது.
இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசு கொடியவர்களின் கூடாரமாக மாறியுள்ளது அந்த கோட்டையை மீட்போம் என்றார்.
மேலும், இவர்கள் செய்யும் கொள்ளையில் இருந்து மக்களை காப்போம், கொரோனாவை விட கொடிய அரசு இந்த அரசு, எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்காக மக்கள் வாக்களிக்க வில்லை என தெரிவித்த அவர், மக்கள் மீது அக்கரையில்லாமல் நடந்த கொள்ளும் இந்த ஆட்சி, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிறது என்றார்.
முன்னதாக, நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிட மணி, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இன்று நடந்தது.
இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசு கொடியவர்களின் கூடாரமாக மாறியுள்ளது அந்த கோட்டையை மீட்போம் என்றார்.
மேலும், இவர்கள் செய்யும் கொள்ளையில் இருந்து மக்களை காப்போம், கொரோனாவை விட கொடிய அரசு இந்த அரசு, எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்காக மக்கள் வாக்களிக்க வில்லை என தெரிவித்த அவர், மக்கள் மீது அக்கரையில்லாமல் நடந்த கொள்ளும் இந்த ஆட்சி, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிறது என்றார்.
முன்னதாக, நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிட மணி, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.