கோவை: பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களில், தென்னை நார் கழிவு நீர் வெளியிடும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் இன்று சார்-ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களில், தென்னை நார் கழிவு நீர் வெளியிடும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் இன்று சார்-ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள திம்மங்குத்து பகுதியில், தனியார் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, வெளியேற்றப்படும் தென்னைநார் கழிவு மற்றும் கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் திறந்து விட படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்; திம்மங்குத்து பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக, மழை காலங்களில், விவசாய நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கும் காயர் பித்தின் மீது விழும் நீர், கழிவு நீராக மாசுபட்டு, நிலத்தடியில் இறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துத்கிறது.
மேலும், இந்த கழிவுநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து ஆழியார் ஆற்றில் கலப்பதால், ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில், இந்த ரசாயனம் கலந்த நீர் கலக்கிறது.
இந்நிலையில், அந்த பகுதியில் மேலும் ஒரு தென்னை நார் தொழிற்சாலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் இத்தகைய தென்னை நார், தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அம்மனுவில் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள திம்மங்குத்து பகுதியில், தனியார் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, வெளியேற்றப்படும் தென்னைநார் கழிவு மற்றும் கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் திறந்து விட படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்; திம்மங்குத்து பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக, மழை காலங்களில், விவசாய நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கும் காயர் பித்தின் மீது விழும் நீர், கழிவு நீராக மாசுபட்டு, நிலத்தடியில் இறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துத்கிறது.
மேலும், இந்த கழிவுநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து ஆழியார் ஆற்றில் கலப்பதால், ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில், இந்த ரசாயனம் கலந்த நீர் கலக்கிறது.
இந்நிலையில், அந்த பகுதியில் மேலும் ஒரு தென்னை நார் தொழிற்சாலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் இத்தகைய தென்னை நார், தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அம்மனுவில் தெரிவித்தனர்.