கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே வீட்டின் பின்வாசலை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஏழாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே வீட்டின் பின்வாசலை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஏழாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் நாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை செந்தில்நாதன், அவரது மனைவி கலாவதி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து இன்று காலை அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு படுக்கை அறையில் உள்ள பீரோக்கள் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே வீசப்பட்டு இருந்தது. மேலும், படுக்கை அறையில் இருந்த பீரோவில் 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7,000 ரொக்கம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டின் பின்பக்கம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், படுக்கை அறையில் பீரோ சாவி இருந்ததால் சுலபமாக பீரோவை திறந்து நகை பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அங்கு பதிவான கை ரேகைகளை கொண்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது வேறு யாரேனும் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் நாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை செந்தில்நாதன், அவரது மனைவி கலாவதி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து இன்று காலை அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு படுக்கை அறையில் உள்ள பீரோக்கள் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே வீசப்பட்டு இருந்தது. மேலும், படுக்கை அறையில் இருந்த பீரோவில் 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7,000 ரொக்கம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டின் பின்பக்கம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், படுக்கை அறையில் பீரோ சாவி இருந்ததால் சுலபமாக பீரோவை திறந்து நகை பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அங்கு பதிவான கை ரேகைகளை கொண்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது வேறு யாரேனும் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.