கோவை: போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தனது மூத்த மகன் அபகரிக்க முயற்சிப்பதாக 90 வயது மூதாட்டி இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை: போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தனது மூத்த மகன் அபகரிக்க முயற்சிப்பதாக 90 வயது மூதாட்டி இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை சிவானந்தபுரம் 3 ஆவது வீதியில் வசித்து வருபவர் ராமாத்தாள் (90). ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரபட்ட அவர் தனது இளைய மகன் சின்னராஜ் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில், நான் கணவர் இறந்த பிறகு இளைய மகன் சின்னராஜ் உடன் வசித்து வருகிறேன். எனக்கு விளாங்குறிச்சி பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பு பெறும், சொத்து.
இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் கீழே விழுந்ததில், இடுப்பு பகுதி பாதிக்கப்பட்ட போது, தனது இளைய மகன் சின்னராஜ் தான் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துள்ளார் எனவும் தற்போது இடது கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைதில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மனுவில் ராமத்தாள் தெரிவித்து இருந்தார்.
மேலும், தனது மூத்த மகன் மாணிக்கம், நோட்டரி வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்து 22 பேரிடம் முன்தொகை வாங்கி உள்ளதாகவும், இடத்தை அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் தனது மூத்த மகன் மாணிக்கம் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டு தர வேண்டும், என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இவரது, இந்த மனுவை இளைய மகன் சின்னராஜ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.
கோவை சிவானந்தபுரம் 3 ஆவது வீதியில் வசித்து வருபவர் ராமாத்தாள் (90). ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரபட்ட அவர் தனது இளைய மகன் சின்னராஜ் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில், நான் கணவர் இறந்த பிறகு இளைய மகன் சின்னராஜ் உடன் வசித்து வருகிறேன். எனக்கு விளாங்குறிச்சி பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பு பெறும், சொத்து.
இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் கீழே விழுந்ததில், இடுப்பு பகுதி பாதிக்கப்பட்ட போது, தனது இளைய மகன் சின்னராஜ் தான் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துள்ளார் எனவும் தற்போது இடது கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைதில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மனுவில் ராமத்தாள் தெரிவித்து இருந்தார்.
மேலும், தனது மூத்த மகன் மாணிக்கம், நோட்டரி வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்து 22 பேரிடம் முன்தொகை வாங்கி உள்ளதாகவும், இடத்தை அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் தனது மூத்த மகன் மாணிக்கம் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டு தர வேண்டும், என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இவரது, இந்த மனுவை இளைய மகன் சின்னராஜ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.