திருப்பூர்: திருச்சியிலிருந்து திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பனியன் துணிகளை ஏற்றி வந்த லாரி, காங்கேயம் சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது, நேற்று மாலை நல்லூர் அருகே லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பூர்: திருச்சியிலிருந்து திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பனியன் துணிகளை ஏற்றி வந்த லாரி, காங்கேயம் சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது, நேற்று மாலை நல்லூர் அருகே லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி
விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்தில் இருந்த சில கடைகளின் முன் பக்கம் சேதமடைந்ததுடன், அங்கு சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

மேலும், லாரி மின்கம்பத்தில் மோதியதில், மின்கம்பம் வளைந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

உடனடியாக தகவல் அறிந்த, காவல்துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்தில் இருந்த சில கடைகளின் முன் பக்கம் சேதமடைந்ததுடன், அங்கு சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
மேலும், லாரி மின்கம்பத்தில் மோதியதில், மின்கம்பம் வளைந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்த, காவல்துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.