கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கை, கால்கள் தயாரிக்கும் மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இனி விபத்தினால் கை, கால் இழந்தவர்கள் செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கை, கால்கள் தயாரிக்கும் மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இனி விபத்தினால் கை, கால் இழந்தவர்கள் செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட செயற்கை கை, கால்கள் தயாரிப்பு மற்றும் பொருத்தும் மையத்தை இன்று, தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா தகவல் மற்றும் உதவி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.