கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க வருகின்றனர். இனி, அவ்வாறு வரும் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையாளரிடம், ஸ்கைப் (Skype) என்ற செயலி மூலமாக குறைகளை தெரிவிக்கலாம், என மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க வருகின்றனர். இனி, அவ்வாறு வரும் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையாளரிடம், ஸ்கைப் (Skype) என்ற செயலி மூலமாக குறைகளை தெரிவிக்கலாம், என மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வந்தது. இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதனை, அடுத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வார நாட்களில் வந்து சென்று மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் குறைகள் குறித்த மனுவை அளித்து சென்றனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் கோவையில் வேகமாக பரவி வருவதை அடுத்து மக்கள் நேரடியாக மாநகராட்சி ஆணையாளரை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் ஸ்கைப் என்ற செயலி மூலம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், "குறைகளை தெரிவிக்கும் வரும் பொதுமக்கள் ஸ்கைப் செயலி மூலம் என்னை தொடர் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது," என்றார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வந்தது. இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதனை, அடுத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வார நாட்களில் வந்து சென்று மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் குறைகள் குறித்த மனுவை அளித்து சென்றனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் கோவையில் வேகமாக பரவி வருவதை அடுத்து மக்கள் நேரடியாக மாநகராட்சி ஆணையாளரை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் ஸ்கைப் என்ற செயலி மூலம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், "குறைகளை தெரிவிக்கும் வரும் பொதுமக்கள் ஸ்கைப் செயலி மூலம் என்னை தொடர் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது," என்றார்.