பருவ மழையால் சோலைவனமாக மாறிய டாப்சிலிப் வனப்பகுதிக்கு, சுற்றுலா தளங்களுக்கு செல்ல நீடிக்கும் தடையால் இயற்கை அழகை கண்டு ரசிக்கமுடியாத சூழல் நிலவி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை: பருவமழையால் சோலைவனமாக மாறிய டாப்சிலிப் வனப்பகுதிக்கு, சுற்றுலா தளங்களுக்கு செல்ல நீடிக்கும் தடையால் இயற்கை அழகை கண்டு ரசிக்கமுடியாத சூழல் நிலவி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு, மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கோவையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆன, ஊட்டி, வால்பாறை, டாப்சிலிப், ஏற்காடு, முதுமலை போன்ற இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் மூலிகை மரங்கள், வனவிலங்குகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் டாப்சிலிப், சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும்.
இந்நிலையில், பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் பெய்த பருவமழை காரணமாக, தற்போதுபச்சைபசேல் என சோலைவனமாக மாறியுள்ளது, அப்பகுதி.
டாப்சிலிப் செல்லும் வனச்சாலைகளில் இருபுறமும் வான்உயர்ந்த, தேக்கு மரங்களும், முலிகைமரங்களும் கண்கொள்ள காட்சியாக உள்ளது. மேலும், டாப்சிலிபில் உள்ள புல்மேடு, யானை சவாரி செய்யும் இடங்கள் அனைத்தும், வெறிச்சோடி காணப்படுகிறது.
விடுமுறை நாட்களில் டாப்சிலிப் சென்று மகிழ்ந்து வந்த சுற்றுலா பயணிகள், கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் முடப்பட்டுள்ளதால், டாப்சிலிப் வனப்பகுதியில் தற்போது உள்ள இயற்கை அழகை காண முடியாத நிலை,மனதை ஏக்கமடைய செய்திருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
மேலும், கொரோனா காலத்தில் பணிக்கு சென்றுவிட்டு வீட்டிலே முடக்கியுள்ள மக்களுக்கு, மனரீதியான மாற்றங்களை கொண்டு வர சுற்றுலா தலங்கள் செல்ல விதித்திருக்கும்தடையில், அரசு தளர்வுகளை அறிவிக்குமா?என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.