சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் விநாயகருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.
சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் விநாயகருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து, பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் முதலமைச்சர் வழிபாடு நடத்தினார்.
பூஜையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் முக கவசம் அணிந்திருந்தனர்.
இதேபோல, விநாயகர் சதுர்த்தி விழாவை தமது இல்லத்தில் எளிமையான முறையில் கொண்டாடிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வாழ்வில் வரும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து, அனைத்து மக்களும் அனைத்து வகையான வளமும் நலமும் பெற விநாயக பெருமானின் அருளை வேண்டி அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.