கோவை: கோவையில் நீதிமன்ற தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.
கோவை: கோவையில் நீதிமன்ற தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில், கோவையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தபெதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனிடையே, கோவையில் முத்தன்னன் குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதேபோல, கோவை குறிச்சி குளம், சூலூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.