கோவை: கோவையில் அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை: கோவையில் அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவையில் நீதிமன்ற தடையை மீறி பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சரவணம்பட்டி, செல்வபுரம் பகுதிகளில், பொது இடங்களில் தடையை மீறி சிலை பிரதிஷ்டை செய்த வி.எச்.பி அமைப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தடையை மீறி வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று, கோவை நகரின் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி அனுமதி இன்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றி வருகின்றனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் இன்று 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.