கோவையில் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் வழிபாடு.
கோவை: கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால் கோவையில் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள், பல்வேறு பொது இடங்களில்பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்தஉத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் காரணமாக, கோவையில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இதன்படி, தேர்முட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இந்து மக்கள் கட்சி சார்பில், கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், பூசணிக்காயில் கொரானா வைரஸ்உருவம் பொறிக்கப்பட்டு, அதனை விநாயகர் வேல்கொண்டு வதம் செய்யும் வகையில் ஒரு விநாயகர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்:
தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து, கோவையில் 32 தனியார் இடங்களில், இந்து மக்கள் கட்சி சார்பாக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
சிலைகளை மாலை 3 மணி அளவில் கூட்டம் சேராமல் குறைந்த நபர்களைக் கொண்டுநீர்நிலைகளில் கரைக்க உள்ளதாகவும், கூறினார்.
கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள், பல்வேறு பொது இடங்களில்பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்தஉத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் காரணமாக, கோவையில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இதன்படி, தேர்முட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இந்து மக்கள் கட்சி சார்பில், கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், பூசணிக்காயில் கொரானா வைரஸ்உருவம் பொறிக்கப்பட்டு, அதனை விநாயகர் வேல்கொண்டு வதம் செய்யும் வகையில் ஒரு விநாயகர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்:
தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து, கோவையில் 32 தனியார் இடங்களில், இந்து மக்கள் கட்சி சார்பாக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
சிலைகளை மாலை 3 மணி அளவில் கூட்டம் சேராமல் குறைந்த நபர்களைக் கொண்டுநீர்நிலைகளில் கரைக்க உள்ளதாகவும், கூறினார்.