கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகும்போது, பூங்காவிற்கு என இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், அவ்வாறு, பூங்காவிற்கு அல்லது இணைப்பு பாதை ஏற்படுத்த ஒதுக்கப்படும் நிலங்கள், போதிய பராமரிப்பு இல்லாததால், ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.
கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகும்போது, பூங்காவிற்கு என இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், அவ்வாறு, பூங்காவிற்கு அல்லது இணைப்பு பாதை ஏற்படுத்த ஒதுக்கப்படும் நிலங்கள், போதிய பராமரிப்பு இல்லாததால், ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அப்போது, நகராட்சிக்கு சொந்தமான பல்லடம் ரோடு ரத்தினசபாபதி புறத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில் உள்ள, 27.8 சென்ட் இடம், தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது, தெரியவந்தது.
இதை, இறகுபந்து மைதானமாகவும், உடற்பயிற்சி செய்யும் இடமாகவும், சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர். பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை ஒப்படைக்க உரிய முறையில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது என்று நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு கோடி மதிப்புள்ள அந்த இடம் இன்று நகராட்சி அலுவலர்களால் மீட்கப்பட்டு, இது நகராட்சி பூங்கா அமைக்கப்படவுள்ள இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், இது போன்ற ஆக்கிரமிப்புகள் நடப்பதாகவும், இனியும் தாமதிக்காமல், நகராட்சி உடனடியாக அங்கு பூங்கா அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்படி, பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.