மருத்துவ உபகரணம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு ஞாயிறு முழு ஊரடங்கில் அனுமதி!

சென்னை: மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஜூலை போன்று, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், பால், மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை செயல்படாது. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், விவசாயங்கள், வேளாண் பதப்படுத்துதல் மற்றும் தோட்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களின் உற்பத்தியாளர்கள், பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்றுமதித் தொழில்களுக்கு இனிவரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...