கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95 என்.பி.இட்டேரி தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோர பூங்கா அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95 என்.பி.இட்டேரி தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோர பூங்கா அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி கெற்கு மண்டலம் போத்தனூர் இரயில்வே மேம்பாலம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் குழாய் செல்லும் இரும்புப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின் போது, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு கொரோனா மருத்துவ முகாமில் கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு மற்றும் கபசுர குடிநீர் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

பின்னர், கோவை மாநகராட்சி கெற்கு மண்டலம் போத்தனூர் இரயில்வே மேம்பாலம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் குழாய் செல்லும் இரும்புப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு கொரோனா மருத்துவ முகாமில் கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு மற்றும் கபசுர குடிநீர் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது.