கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது.
கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது.
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்து அமைப்புகள் தடையை மீறி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை முத்தணன் குளம், குறிச்சி குளம் போன்ற இடங்களில் தடுப்புகள் போடப்பட்டு, மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தடை அறிவித்திருக்கும் நிலையில், இந்த ஏற்பாடுகள் எதற்காக என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நடைபெறும் ஏற்பாடுகளை பார்த்தால், விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விஜர்ஜன ஊர்வலம் நடைபெறுமோ? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.