மாநகராட்சி சார்பில் கோவை ஊடகவியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊடகவியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று வருவதால், அவர்களுக்கு தகுந்த இடைவெளியில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊடகவியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று வருவதால், அவர்களுக்கு தகுந்த இடைவெளியில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 



இந்த நிலையில், கோவையில் மட்டும் 300கும் மேற்பட்ட ஊடகவியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றார். கொரோனா தொற்று ஊரடங்கு காலகட்டங்களில் செய்தி சேகரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டு இருந்த நிலையில் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.



இந்நிலையில், ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனை தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்டது. மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் உத்தரவின் பேரில் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டது. காலை 10 மணிக்கு முகாம் துவங்கிய நிலையில் பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள் பலர் பரிசோதனைகள் செய்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கபசுர குடிநீர், ஜின்க் மற்றும் ஆர்சானிக் மாத்திரைகள் வழங்கபட்டது. 



மதியம் இரண்டு மணி வரை இந்த முகாம் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...