பொள்ளாச்சியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது; 55 சவரன் நகைகள், ரூ.128,000 பறிமுதல்.

கோவை: பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில், கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது.

கோவை: பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில், கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. 

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டார். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.



இந்நிலையில், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் மாக்கினாம்பட்டி நேரு நகரை சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரும், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி, பாலக்காடு ரோடு அன்பு நகர், கோட்டூர் கரியான்செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை உடைத்து நகை பணம் திருடியது, வஞ்சியாபுரம் அரசு டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் திருடியது, உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 



இதையடுத்து, இருவரும் கொள்ளையடித்த 55.50 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1,28,000 பணம் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-யில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...