கோவை: கோவை அருகே நடிகர் வடிவேல் பாணியில் நூதன முறையில் கடை உரிமையாளரை ஏமாற்றி அரிசி மூட்டையை ஒருவர் திருடிச் சென்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே நடிகர் வடிவேல் பாணியில் நூதன முறையில் கடை உரிமையாளரை ஏமாற்றி அரிசி மூட்டையை ஒருவர் திருடிச் சென்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (47). இவர் ரங்கநாதபுரம் பகுதியில் சொந்தமாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தினமும் அருகிலுள்ள பவுண்டரிக்கு வேலைக்குச் செல்வதால், இவரது மனைவி லலிதா (40) மகன் அசோக் குமார் ஆகியோர் அரிசி கடையை பகல் நேரங்களில் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் தனக்கு அரிசி தேவை எனக்கூறி செந்தில்குமாரை அழைத்துக் கொண்டு கடை வந்துள்ளார்.
அங்கு வந்தவுடன் தனக்கு 5 மூட்டை அரிசி தேவை எனவும் அரிசி மூட்டையை தனது வீட்டுக்கு கொண்டு வந்து தருமாறும், அங்கு வந்து அதற்கான தொகையை பெற்று செல்லுமாறு கேட்டுள்ளார். இதை நம்பி, அந்நபரின் வண்டியில் இரண்டு மூட்டை அரிசி ஏற்றி விட்டு, மேலும் மூன்று மூட்டையை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, அசோக் குமார் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, இரண்டு மூட்டை ஏற்றிய நிலையில், அடையாளம் தெரியாத அந்த நபர், தனது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரைத் துரத்திச் சென்ற செந்தில்குமார், எங்கேயும் காணாது திகைத்து நின்ற போது, தான் அவர் ஏமாற்றப்பட்டது, செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது.
இப்படி, சினிமா பட பாணியில் அரிசி கடையில் நூதனமான வகையில் திருடி சென்ற சம்பவம் குறித்து, சூலூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்தார்.
அப்போது, அங்கு வந்த காவல் துறையினர், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

கோவை சூலூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (47). இவர் ரங்கநாதபுரம் பகுதியில் சொந்தமாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தினமும் அருகிலுள்ள பவுண்டரிக்கு வேலைக்குச் செல்வதால், இவரது மனைவி லலிதா (40) மகன் அசோக் குமார் ஆகியோர் அரிசி கடையை பகல் நேரங்களில் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் தனக்கு அரிசி தேவை எனக்கூறி செந்தில்குமாரை அழைத்துக் கொண்டு கடை வந்துள்ளார்.
அங்கு வந்தவுடன் தனக்கு 5 மூட்டை அரிசி தேவை எனவும் அரிசி மூட்டையை தனது வீட்டுக்கு கொண்டு வந்து தருமாறும், அங்கு வந்து அதற்கான தொகையை பெற்று செல்லுமாறு கேட்டுள்ளார். இதை நம்பி, அந்நபரின் வண்டியில் இரண்டு மூட்டை அரிசி ஏற்றி விட்டு, மேலும் மூன்று மூட்டையை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, அசோக் குமார் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, இரண்டு மூட்டை ஏற்றிய நிலையில், அடையாளம் தெரியாத அந்த நபர், தனது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரைத் துரத்திச் சென்ற செந்தில்குமார், எங்கேயும் காணாது திகைத்து நின்ற போது, தான் அவர் ஏமாற்றப்பட்டது, செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது.
இப்படி, சினிமா பட பாணியில் அரிசி கடையில் நூதனமான வகையில் திருடி சென்ற சம்பவம் குறித்து, சூலூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்தார்.
அப்போது, அங்கு வந்த காவல் துறையினர், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.