திருப்பூர்: ராஜீவ் காந்தி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப் பயணத்தை காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, இன்று துவக்கி வைத்தார்.
திருப்பூர்: ராஜீவ் காந்தி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப் பயணத்தை காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, இன்று துவக்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த, அவர் "நீட் தேர்வு அச்சம் காரணமாக கோவையில் நேற்றைய தினம் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தேர்வைக் கண்டு மாணவ மாணவிகள் அச்சப்படக்கூடிய சூழல் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட்தேர்வு விளக்க தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தது போல, விருப்பப்படுன்ற மாநிலங்களில் மட்டுமே நீட் தேர்வை வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்."

"அதிமுக அரசு மத்திய அரசிடம் பேரம் பேசியோ, போராடியோ உரிமை பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால், அதிமுக இம்முறை தேர்தலை சந்திப்பது பெரும் சிரமமாக இருக்கும்" எனவும் பேட்டியளித்தார்.